Home இலங்கை சமூகம் அமைச்சர் சந்திரசேகர் தலைமையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடல்

அமைச்சர் சந்திரசேகர் தலைமையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடல்

0

கிளிநொச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தி வேலைகள் மற்றும்
தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் தொடர்பிலான கலந்துரையாடல் கடற்றொழில்
நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர் தலைமையில் நடைபெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடலானது இன்று (27.05.2025) இடம்பெற்றுள்ளது.

பலர் பங்கேற்பு

கிளிநொச்சி மாவட்டத்தின் வீதி புனரமைப்பு வேலைகள், நீர் வளங்கல் வேலைத்திட்டங்கள் மற்றும் மின்சார இணைப்பு, காணி உரிமைகள் மற்றும் எல்லைகள்
தொடர்பிலும் மற்றும் வன விலங்குகள் பாதுகாப்பு திட்டம் ஆகிய விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இக்கலந்துரையாடலில் மாவட்ட அரச அதிபர் எஸ்.முரளிதரன், கரைச்சி கண்டாவளை பூனகரி
பச்சிலைப்பள்ளி ஆகிய பிரதேச சபைகளின் செயலாளர்கள், துறைசார் திணைக்கள தலைவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

NO COMMENTS

Exit mobile version