Home இலங்கை குற்றம் பொலிஸாரின் விசேட சுற்றிவளைப்பில் சிக்கிய நபர்!

பொலிஸாரின் விசேட சுற்றிவளைப்பில் சிக்கிய நபர்!

0

பொலிஸாரின் விசேட சுற்றிவளைப்பில் துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொபெயிகனே பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அரலுகஸ்வெவ பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடனே சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணை

இதன்போது 45 வயதுடைய குளியாப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைதானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொபெயிகனே பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக நேற்று (16) முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொபெயிகனே பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version