கொத்மலையின் கடந்த 11 ஆம் திகதி நடந்த பேருந்து விபத்து குறித்து விசாரிக்க பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவால் நியமிக்கப்பட்ட குழுவின் அதிகாரிகள், குறித்த பகுதியை நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.
குழுவின் அதிகாரிகள், பேருந்து விபத்து நடந்த இடத்தையும், விபத்தில் சிக்கிய பேருந்தையும் ஆய்வு செய்வதற்காக இன்று கொத்மலைக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பேருந்து விபத்து நடந்த இடத்தை ஆய்வு செய்த பின்னர், மூத்த பதில் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண, சட்டத்தரணி ருவான் குணசேகர உள்ளிட்ட குழுவினர் கொத்மலை பொலிஸ் நிலையத்திற்குச் சென்று, விபத்தில் சிக்கிய பேருந்தை ஆய்வு செய்துள்ளனர்.
பொலிஸ் அதிகாரிகள்
இதன்போது பொலிஸ் அதிகாரிகளுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு, அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
