Home இலங்கை சமூகம் கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கை

கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கை

0

கிளிநொச்சி (Kilinochchi) மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் அளவீட்டு அலகுகள்
திணைக்களத்தினால்
சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

குறித்த திணைக்களத்தினால் கிளிநொச்சி வட்டக்கச்சி சந்தைப்பகுதி
மற்றும் பரந்தன், கண்டாவளை போன்ற பகுதிகளில் நேற்றும் சோதனை நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட்டன.

உரிய நடவடிக்கைகள்

உரிய காலத்தில் முத்திரையிடப்படாத மற்றும் அரச அனுமதியற்ற தராசுகள், திணைக்களத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும் நெல் கொள்வனவின் போது அரச அனுமதியற்ற தராசைப் பயன்படுத்தி மோசடி செய்தமை
கண்டுபிடிக்கப்பட்டதோடு
அளவீட்டு அலகுகள் திணைக்கள அதிகாரிகளால் கிளிநொச்சி பொலிஸாரின் உதவியுடன் உரிய
நடவடிக்கைகளும் மோசடிக்காரர்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

NO COMMENTS

Exit mobile version