Home இலங்கை குற்றம் யாழில் விசேட சுற்றிவளைப்பு : போதைப்பொருளுடன் பலர் கைது

யாழில் விசேட சுற்றிவளைப்பு : போதைப்பொருளுடன் பலர் கைது

0

யாழ்ப்பாணம் பொலிஸார் நடத்திய சுற்றிவளைப்பு சோதனை நடவடிக்கைகளின்போது கடந்த 3
நாளில் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் எட்டுப் பேர்
கைது செய்யப்பட்டுள்ளனர்.

160 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் இரண்டு சந்தேக நபர்களும் போதை
மாத்திரை, ஹெரோயின், மாவா என்பனவற்றுடன் ஆறு சந்தேக நபர்களும் இவ்வாறு கைது
செய்யப்பட்டுள்ளனர்.

கைதான சந்தேக நபர்களிடம் மேலதிக விசாரணைகளை நடத்தி யாழ்ப்பாணம் நீதிவான்
நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version