Home இலங்கை குற்றம் யாழில் விசேட சுற்றிவளைப்பு : ஐவர் கைது

யாழில் விசேட சுற்றிவளைப்பு : ஐவர் கைது

0

யாழ்ப்பாணம் (Jaffna) குருநகரில் பொலிஸார் நடாத்திய விசேட சுற்றிவளைப்பு சோதனையின் போது ஐவர் கைது செய்யப்பட்டனர்.

யாழ்ப்பாணப் பிராந்திய பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமைய குறித்த கைது நடவடிக்கை இன்று (21.06.2024) முன்னெடுக்கப்பட்டது.

பொசன் தினம்

பொசன் தினத்தில் மதுபானங்களை விற்பனை செய்த குற்றச்சாட்டில் ஒருவரும் ஹெரோயின் போதைப் பொருளுடன் இருவரும், கஞ்சா கலந்த மாவாவுடன் இருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

கைது நடவடிக்கையின் போது 19 மதுபான போத்தல்கள், 70 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் 80 கிராம் கஞ்சா கலந்த மாவா என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

NO COMMENTS

Exit mobile version