Home இலங்கை சமூகம் விசேட சம்பள உயர்வை பெறும் அரச அதிகாரிகள்: கிடைத்தது அங்கீகாரம்

விசேட சம்பள உயர்வை பெறும் அரச அதிகாரிகள்: கிடைத்தது அங்கீகாரம்

0

நிறைவேற்று தரத்திற்கு உள்ளடங்காத அரசாங்க அதிகாரிகளுக்கு விசேட சம்பள உயர்வொன்றை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

2024 ஆம் ஆண்டு ஜூலை 8 ஆம், 9 ஆம் திகதிகளில் கடமைக்கு சமூகமளித்த அதிகாரிகளுக்கு மாத்திரம் இந்த சம்பள உயர்வு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் படி, எதிர்கால பதவி உயர்வுகளுக்குப் பயன்படுத்தும் வகையில் விசேட பாராட்டுச் சான்றிதழொன்றை வழங்குவதற்கும் அதிபர் ரணில் விக்ரமசிங்க அமைச்சரவைக்கு, செவ்வாய்க்கிழமை (09) சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

  

சுற்றறிக்கை

இது தொடர்பில் அனைத்து அமைச்சின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் மற்றும் மாகாண பிரதம செயலாளர்களுக்கு அறிவித்து அது தொடர்பான சுற்றறிக்கைகளை வெளியிடுமாறு பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பணிப்புரை விடுத்துள்ளார்.

அரச சேவையின்நிறைவேற்று தரத்திற்கு உள்ளடங்காத சில சேவைகளில் உள்ள பல தொழிற்சங்கங்கள் 08 மற்றும் 09 ஜூலை 2024 அன்று சுகவீன விடுமுறை அறிவித்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.

இந்த நிலையில், தற்போதுள்ள நிதி நிலைமையின் கீழ், மக்கள் மீது கூடுதல் வரிச்சுமையை சுமத்தாமல், முழு அரச சேவைக்கும் தற்போதைக்கு கூடுதல் சம்பளம் அல்லது கொடுப்பனவுகளை வழங்குவதற்கு சாத்தியமில்லை என்றும் திறைசேரி செயலாளர் தெரிவித்திருந்தைமை குறிப்பிடத்தக்கது.  

NO COMMENTS

Exit mobile version