Home இலங்கை சமூகம் சம்மாந்துறையில் கசிப்பு உற்பத்தி பொருட்கள் மீட்பு

சம்மாந்துறையில் கசிப்பு உற்பத்தி பொருட்கள் மீட்பு

0

அம்பாறையில் ஒரு தொகுதி கசிப்பு உற்பத்தி பொருட்கள் சம்மாந்துறை பொலிஸ் நிலைய ஊழல் ஒழிப்பு பிரிவினரினால் மீட்கப்பட்டுள்ளது.

சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வத்தை பகுதியில் உள்ள வயல்வெளியில் நீண்ட காலமாக இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையமே இவ்வாறு நேற்று (19.05.2025) முற்றுகை இடப்பட்டு மீட்கப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட கசிப்பு உற்பத்தி பொருட்கள்

ஆற்றங்கரை அருகில் மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கசிப்பு உற்பத்தி பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதேவேளை பொருட்களை மீட்ட பொலிஸ் ஊழல் ஒழிப்பு பிரிவினர் சந்தேகநபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த பொருட்கள் யாவும் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்திற்கு சட்ட நடவடிக்கைக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version