Home ஏனையவை வாழ்க்கைமுறை இலங்கையின் வைத்தியசாலை ஒன்றில் முதன்முறையாக வெற்றிகரமாக அறுவை சிகிச்சை

இலங்கையின் வைத்தியசாலை ஒன்றில் முதன்முறையாக வெற்றிகரமாக அறுவை சிகிச்சை

0

குளியாப்பிட்டி போதனா மருத்துவமனை முதன்முறையாக வெற்றிகரமாக முதுகெலும்பு அறுவை சிகிச்சையை செய்யப்பட்டுள்ளது.

இந்த அறுவை சிகிச்சை நேற்று எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் சானக சோலங்கராச்சியால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த அறுவை சிகிச்சை கொழும்பு மற்றும் கண்டி போன்ற தேசிய மருத்துவமனைகளில் கூட செய்யப்படாத ஒரு அரிய அறுவை சிகிச்சை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறுவை சிகிச்சை

வழக்கமாக முதுகெலும்பில் ஒரு பெரிய கீறலை மேற்கொண்டு இந்த அறுவை சிகிச்சை, எண்டோஸ்கோபிக் முறையைப் பயன்படுத்தி செய்யப்பட்டது.

கமராவை பயன்படுத்தி கண்காணிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய முறையால், நோயாளிக்கு முழு மயக்க மருந்து தேவையில்லை, மேலும் தொடர்புடைய பகுதி மட்டுமே மரத்துப் போகிறது.

இதன் மூலம் நோயாளி விரைவாக குணமடைய முடியும். மேலும் அறுவை சிகிச்சைக்கு அடுத்த நாள் அவர் சுயமாக நடக்க முடியும் என்று மருத்துவர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நீரிழிவு மற்றும் இதய நோய் போன்ற பிற நோய்கள் உள்ளவர்களுக்கு இந்த முறையின் கீழ் அறுவை சிகிச்சை செய்வது பாதுகாப்பானது என மருத்துவர் கூறியுள்ளார்.

இந்த முறை முதலில் பொலன்னறுவை மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்பட்டது. அங்கு செய்யப்பட்ட பெரும்பாலான அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக இருந்தன என அவர் மேலும் கூறினார்.


குளியாப்பிட்டி மருத்துவமனை

இரண்டு வாரங்களுக்கு முன்பு குளியாப்பிட்டி மருத்துவமனையில் பொறுப்பேற்ற அவர், நேற்று ஒரே முறையின் கீழ் இரண்டு அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக செய்யப்பட்டதாக கூறினார்.

அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட 20 வயது யுவதியின் பெற்றோர், தாங்கள் மாத்தறையிலிருந்து வந்து மருத்துவரை கண்டுபிடித்ததாகவும், அறுவை சிகிச்சை மிகவும் வெற்றிகரமாக முடிக்கப்பட்டதாகவும் தெரிவி்ததுள்ளனர்.

முதுகெலும்பு பிரச்சினைகள் உள்ள எவரும் பயமின்றி குளியாப்பிட்டி மருத்துவமனைக்கு வரலாம் என அவர்கள் கூறியுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version