Home விளையாட்டு பதவி விலகியுள்ள மஹேல ஜயவர்தன: சிறிலங்கா கிரிக்கெட் சபை அறிவிப்பு

பதவி விலகியுள்ள மஹேல ஜயவர்தன: சிறிலங்கா கிரிக்கெட் சபை அறிவிப்பு

0

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் (Sri Lanka Cricket)  ஆலோசகர் மற்றும் பயிற்றுவிப்பாளராக பணியாற்றிய மஹேல ஜயவர்தன (Mahela Jayawardene) தனது பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பித்துள்ளார் என சிறிலங்கா கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

மஹேல ஜயவர்தனவின் பதவிக் காலத்தில் இலங்கை கிரிக்கெட் துறையில் பல்வேறு அடிப்படை மாற்றங்களை மேற்கொண்டதாக சிறிலங்கா கிரிக்கெட் சபை குறிப்பிட்டுள்ளது.

மேலும், மஹேல ஜயவர்தனவின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு வெற்றி பெறுவதற்கு வாழ்த்துகளையும் சிறிலங்கா கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணி

இலங்கை கிரிக்கெட் அணி அண்மைய போட்டிகளில் தொடர் தோல்விகளை சந்தித்து வருகின்றது.

குறிப்பாக அண்மையில் உலகக் கிண்ண ரி20 போட்டித் தொடரின் முதல் சுற்றிலேயே இலங்கை வெளியேறியமை பல்வேறு மட்டங்களிலும் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியிருந்தது.

இந்த நிலையில் மஹேல ஜயவர்தன தனது பதவி விலகல் கடிதத்தை கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version