Home இலங்கை பொருளாதாரம் இலங்கையில் தனிநபரொருவருக்கு தேவைப்படும் குறைந்தபட்ச பணம் குறித்து வெளியான புதிய தகவல்

இலங்கையில் தனிநபரொருவருக்கு தேவைப்படும் குறைந்தபட்ச பணம் குறித்து வெளியான புதிய தகவல்

0

2025 ஜனவரி மாதத்திற்கான அதிகாரபூர்வ வறுமைக்கோடு அட்டவணையை மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் துறை வெளியிட்டுள்ளது.

இதன்படி, 2025 ஜனவரியில் ஒரு நபர் தனது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஒரு மாதத்தில் தேவைப்படும் குறைந்தபட்ச தொகை 16,334 ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2024 டிசம்பரில் பதிவு செய்யப்பட்ட ரூ.16191ஐ விட இது 0.88% அதிகமாகும்.

இலங்கையில் பணவீக்கம்

2025 ஜனவரியில் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின்படி இலங்கையில் பணவீக்கம் முந்தைய மாதத்துடன் ஒப்பிடுகையில் அதிகரித்துள்ளது, இது முக்கியமாக வறுமைக்கோடு உயர்வதற்கு காரணமாக உள்ளது.

வறுமைக்கோடு அட்டவணை மாவட்ட மட்டத்தில் வெளியிடப்பட்டுள்ளது, அதில் கொழும்பு மாவட்டத்தில் அதிக மதிப்பு பதிவாகியுள்ளது.

அதன்படி, கொழும்பு மாவட்டத்தில் வசிக்கும் ஒருவருக்கு அவர்களின் குறைந்தபட்ச அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய 17,617 ரூபாய் தேவைப்படும்.

குறைந்த பெறுமதி மொனராகலை மாவட்டத்திலிருந்து 15,618 ரூபாவாக பதிவாகியுள்ளது.

NO COMMENTS

Exit mobile version