Home இலங்கை சமூகம் வெளிநாடொன்று வழங்கிய அரிய வாய்ப்பை நழுவ விடும் அநுர அரசு

வெளிநாடொன்று வழங்கிய அரிய வாய்ப்பை நழுவ விடும் அநுர அரசு

0

தென்கொரியாவினால் (South Korea) வழங்கப்படவிருந்த 10,000 தொழில் வாய்ப்புக்களை இலங்கை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, விவசாயம் மற்றும் மீன்பிடித் துறையில் இந்த தொழில் வாய்ப்பு வழங்கப்படவிருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், குறித்த உடன்படிக்கை தொடர்பில் புதிய அரசாங்கம் அக்கறை காட்டாமல் இருப்பதாக குறிப்பிடப்படுகிறது.

தொழில் வாய்ப்பு

இதன் படி, இலங்கைக்கு வழங்கப்படவிருந்த 10,000 தொழில் வாய்ப்புக்களையும் வேறு நாட்டுக்கு வழங்குவது தொடர்பில் தென்கொரிய அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது.

இதன் மூலம் இலங்கை பெற்ற ஒதுக்கீட்டை கம்போடியா பெற்றுக் கொள்ள வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

NO COMMENTS

Exit mobile version