ரி20 (T20) உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் நடைபெறவிருந்த இலங்கை (Sri Lanka) மற்றும் நேபாளம் (Nepal) அணிகளுக்கு இடையிலான போட்டி கைவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த போட்டியானது இலங்கை நேரப்படி இன்று (12.6.2024) அதிகாலை 5 மணிக்கு போட்டி ஆரம்பமாகவிருந்தது.
நாணய சுழற்சி
எனினும், தொடர்ந்து பெய்த கடும் மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல், போட்டி கைவிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், நாணய சுழற்சியை கூட போட முடியவில்லை என அறிவிக்கப்பட்டதன்படி, இரண்டு அணிகளுக்கும் தலா ஒவ்வொரு புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Source: https://ibctamil.com/article/sri-lanka-nepal-match-abandoned-t20-worl-cup-2024-1718170605
