Home இலங்கை சமூகம் வாக்களிப்பிற்கு பின்னர் வன்முறை வெடிக்குமா..! காவல்துறை அளித்துள்ள விளக்கம்

வாக்களிப்பிற்கு பின்னர் வன்முறை வெடிக்குமா..! காவல்துறை அளித்துள்ள விளக்கம்

0

நாளையதினம் ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்களிப்பின் பின்னர் வன்முறை வெடிக்குமா, அத்தியாவசிய பொருட்களை வாங்கி வைத்துக்கொள்ளவேண்டுமா என்ற கேள்விக்கு காவல்துறை ஊடக பேச்சாளர் நிஹால் தல்துவ பதில் அளித்துள்ளார்.

இதன்படி மக்கள் கடந்த தேர்தல் பிரசார காலத்தை போல் சட்டத்தை மதித்து நடந்தால் பிரச்சினை ஏதும் நடக்காது என கூறிய அவர்காவல்துறை மற்றும் காவல்துறை விசேட அதிரடிப்படை சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட தயார் நிலையில் இருப்பதாக கூறினார்.

காவல்துறை முறைப்பாடுகள்

கடந்த காலங்களோடு ஒப்பிடும் போது தேர்தலுக்கு முன்னரான பிரசாரம் இடம்பெற்ற காலம் மிகவும் அமைதியாக இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

இதுவரை 450 தேர்தல் தொடர்பான காவல்துறை முறைப்பாடுகள் கிடைத்த போதும் அதில் 10 சம்பவங்கள் மட்டுமே சற்று கவணிக்கத்தக்க சம்பவம் என கூறியுள்ளார்.

காவல்துறை பாதுகாப்பு

மேலும் 63000 காவல்துறையினர் தேர்தல் தொடர்பான நேரடி கடமைகளில் உள்ளதாகவும் 20 ஆயிரத்துக்கும் அதிகமான காவல்துறையினர் ரோந்து நடவடிக்கைகளில் உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

NO COMMENTS

Exit mobile version