அனைத்து இயற்கை வளங்களும் நிரம்பிய வரம் நிறைந்த நாடான இலங்கைக்கு அதுவே சாபமாக மாறியுள்ளது.
1957ஆம் ஆண்டிற்கு பின்னர் இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது, சுனாமியை விட பாரியளவு சேதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
இலங்கை முழுதும் அனர்த்தங்கள் ஏற்பட்டிருந்தாலும், மலையகத்தில் பேரழிவு ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
இவ்வாறான சூழ்நிலையில் வருமானம் குறைந்த மக்கள் தான் இந்த அனர்த்தங்களில் அதிகமாக பாதிக்கப்படுவதாக பேராசிரியர் கோ.அமிர்தலிங்கம் தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நாடு முழுவதும் ஸ்தம்பிதமடைந்துள்ளது, மலையகத்தில் குடிநீர் கிடைக்காமல் தற்போது மழைநீரை குடித்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது என்று குறிப்பிட்டார்.
இந்த விடயங்கள் தொடர்பில் பேசுகின்றது ஊடறுப்பு நிகழ்ச்சி..
