Home இலங்கை பொருளாதாரம் கட்டுநாயக்கவிலிருந்து சென்ற ஸ்ரீலங்கன் விமானம் அவசரமாக தரையிறக்கம்! பயணிகளிடத்தில் கடும் பதற்றம்

கட்டுநாயக்கவிலிருந்து சென்ற ஸ்ரீலங்கன் விமானம் அவசரமாக தரையிறக்கம்! பயணிகளிடத்தில் கடும் பதற்றம்

0

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூருக்கு நேற்று மாலை புறப்பட்ட UL 306 ஸ்ரீலங்கன் விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்தோனேசியாவின் மேடான் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. 

இந்தோனேசிய தொழில்நுட்பக் குழுவினர் விமானத்தை ஆய்வு செய்ததுடன், கோளாறை சரிசெய்ய நேரம் எடுக்கும் என தெரிவித்துள்ளனர்.

கடும் குழப்ப நிலை

இதனை தொடர்ந்து, அதுவரை பயணிகளை ஹோட்டல் அறைகளில் வைத்திருக்க  இலங்கை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

எனினும், இந்தோனேசிய அதிகாரிகள் பயணிகளை ஹோட்டல் அறைகளில் தங்க அனுமதிக்காதபோது கடுமையான நெருக்கடி மற்றும் குழப்ப நிலை ஏற்பட்டது. 

மேலும் அந்த நாட்டிற்கான இலங்கை தூதர் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க தலையிட்டுள்ளார். 

இதற்கிடையில், தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்ட இலங்கை விமானத்தை ஆய்வு செய்வதற்காக இன்று காலை ஜகார்த்தாவுக்குப் புறப்பட்ட விமானத்தில் இலங்கை தொழில்நுட்பக் குழு பயணித்துள்ளது. 

விபத்துக்குள்ளான விமானத்தில் பயணிகளை திருப்பி அனுப்ப இன்று மதியம் 1.45 மணிக்கு மற்றொரு விமானம் புறப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version