Home இலங்கை சமூகம் வெளிநாட்டு இசைக்கலைஞரை அச்சுறுத்திய இலங்கை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்

வெளிநாட்டு இசைக்கலைஞரை அச்சுறுத்திய இலங்கை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்

0

இலங்கைக்கு வருகை தந்துள்ள வெளிநாட்டு இசைக் கலைஞரான பெண் ஒருவரை இலங்கை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அச்சுறுத்திய சம்பவமொன்று நுவரெலியாவில் பதிவாகியுள்ளது.

நுவரெலியாவின் வசந்த கால கொண்டாட்டங்களை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த டீஜே (DJ) இசை நிகழ்ச்சியொன்றுக்கு வெளிநாட்டு டீஜே (DJ) இசைக்கலைஞரான பெண் ஒருவர் வரவழைக்கப்பட்டுள்ளார்.

கொடுப்பனவு தொடர்பில் வாக்குவாதம்

முடிவில் ஒப்புக் கொள்ளப்பட்ட கொடுப்பனவு தொடர்பில் இசைக் கலைஞருக்கும் ஏற்பாட்டுக் குழுவினருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அதனையடுத்து உள்ளூர் குண்டர்களைக் கொண்டு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் குறித்த இசைக்கலைஞரை அச்சுறுத்தியுள்ளனர்.

Source: https://tamilwin.com/article/sri-lankan-organizers-threaten-foreign-musician-1714351937

NO COMMENTS

Exit mobile version