Home இலங்கை கல்வி வெளிநாட்டிற்கு படையெடுக்கும் இலங்கையர்கள்

வெளிநாட்டிற்கு படையெடுக்கும் இலங்கையர்கள்

0

இந்த வருடத்தின் முதல் 4 மாதங்களில் மாத்திரம் 2000 இற்கும் அதிகமான இலங்கையர்கள் கொரிய வேலைகளுக்கு சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

கடந்த 4 மாதங்களில் 2,064 பேர் தென் கொரியாவிற்கு தொழில் வாய்ப்பிற்காக சென்றுள்ளதாக பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.

அதன்படி, உற்பத்தித் துறை தொடர்பான வேலைகளுக்காக 1708 பேரும், மீன்பிடித் துறைக்கு 351 பேரும், கட்டுமானத் துறைக்கு 5 பேரும் தென்கொரியாவுக்குச் சென்றுள்ளனர்.

தெஹிவளையில் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சட்டத்தரணி : சொத்துக்கள் கொள்ளை

தென்கொரியாவில் தொழில் வாய்ப்பு

அவர்களில் 1,892 பேர் முதல் முறையாக தென் கொரியாவில் வேலைக்காக புறப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த காலப்பகுதியில் 41 யுவதிகளும் தென்கொரியாவிற்கு தொழில் வாய்ப்பிற்காக சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டுக்கு தப்பிச்செல்ல முயன்ற பிரதான பாதாள உலகக்கும்பலின் உறுப்பினர் கைது

பயனாளிகளின் கணக்குகளில் 115 பில்லியன் ரூபா: மகிழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 

NO COMMENTS

Exit mobile version