Home இலங்கை சமூகம் புறப்பட்ட சிறிது நேரத்தில் மீண்டும் கட்டுநாயக்கா திரும்பிய சிறிலங்கன் எயார் லைன்ஸ்

புறப்பட்ட சிறிது நேரத்தில் மீண்டும் கட்டுநாயக்கா திரும்பிய சிறிலங்கன் எயார் லைன்ஸ்

0

தென் கொரியாவுக்குச்(south korea) சென்று கொண்டிருந்த சிறிலங்கன் எயார் லைன்ஸ்(srilankan air lines) விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கொழும்புக்குத் திரும்பியது.

தென் கொரியாவில் உள்ள இன்சியான் சர்வதேச விமான நிலையத்திற்குச் சென்ற UL 470,என்ற சிறிலங்கன் விமானமே தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கொழும்புக்குத் திரும்பியது.

புறப்பட்ட சிறிது நேரத்தில் திரும்பி வந்த விமானம்

விமானம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 18:31 மணிக்கு புறப்பட்டு 20:10 அளவில் கொழும்பு திரும்பியது.

விமானத்தை மாற்றியுள்ளதாக சிறிலங்கன் எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது, மேலும் புதிய எதிர்பார்க்கப்படும் புறப்படும் நேரம் இரவு 10:15 ஆகும் எனவும் தெரிவிக்கப்பட்டது. 

Source: https://ibctamil.com/article/srilankan-flight-south-korea-returns-to-colombo-1720369879

NO COMMENTS

Exit mobile version