Home இலங்கை சமூகம் தேசிய கணக்காய்வு அலுவலகத்தில் அறிக்கைகளை வெளியிடுவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்

தேசிய கணக்காய்வு அலுவலகத்தில் அறிக்கைகளை வெளியிடுவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்

0

தேசிய கணக்காய்வு அலுவலகத்தில் ஊழியர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக குறித்த அலுவலகத்தின் செற்பாடுகள் பாதிப்படைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

தேசிய கணக்காய்வு அலுவலகத்தில் தற்போது 2,400 பேர் பணிபுரிய வேண்டிய நிலையில், தற்போது 1,400 அதிகாரிகள் மாத்திரம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொழிபெயர்ப்பாளர்கள் பற்றாக்குறை

இதேவேளை, மொழிபெயர்ப்பாளர்கள் பற்றாக்குறைக் காரணமாக கணக்காய்வு அறிக்கைகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனவே 165 கணக்காய்வு அத்தியட்சகர்கள் மற்றும் 465 கணக்காய்வு உத்தியோகத்தர்களை இணைத்துக் கொள்ளவுள்ளதாகவும், கணக்காய்வாளர் வெற்றிடங்களுக்கு சுமார் 600 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாகவும் அரசாங்க கணக்காய்வாளர் நாயகம் டபிள்யூ.பி.சி விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

Source: https://tamilwin.com/article/staff-shortage-in-national-audit-office-1714231290

NO COMMENTS

Exit mobile version