உள்ளூராட்சி நிறுவனங்களில் இவ்வாண்டு வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றுவதில் தேசிய மக்கள் சக்தி கட்சியை ஆதரித்த சிறிலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் மீது கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என அக்கட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
கட்சியின் முடிவுக்கு மாறாக செயல்பட்ட இந்த உறுப்பினர்கள் மீது ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவாக வாக்களித்த உறுப்பினர்களின் கட்சி உறுப்பினர் பதவியை தற்காலிகமாக இடைநிறுத்த சிறிலங்கா சுதந்திரக் கட்சி நடவடிக்கை மேற்கொள்ளபட்டுள்ளது.
ஒழுக்காற்று நடவடிக்கை
இந்த உறுப்பினர்களிடம் ஏற்கனவே அதற்கான காரணங்கள் கோரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் அவர்கள் மீது கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கட்சி மேலும் தெரிவித்துள்ளது.
கட்சியின் கொள்கைகளை மீறி ஒரு எதிர்க்கட்சி அரசியல் குழுவை ஆதரித்தமையே இந்த ஒழுங்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
