நாடு தழுவிய பணிப்புறக்கணிப்பு திட்டமிட்டபடி நடைபெறும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.
குறித்த பணிப்புறக்கணிப்பை நாளைய தினம் காலை 8 மணிக்கு ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கோரிக்கைகள் முன்வைப்பு
பல கோரிக்கைகளை முன்வைத்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்திருந்தது.
மருத்துவ அதிகாரிகளின் இடமாற்றச் செயல்முறை தொடர்பான பிரச்சினைகள் உட்பட பல கோரிக்கைகளை அடிப்படையாக கொண்டு இந்த பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ள அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் திட்டமிடப்பட்டுள்ளது.
