Home இலங்கை சமூகம் படுகொலைக்கு நீதி கோரிய போராட்டத்தில் முறுகல் நிலை

படுகொலைக்கு நீதி கோரிய போராட்டத்தில் முறுகல் நிலை

0

முல்லைத்தீவு – மல்லாவி பிரதேசத்தினை சேர்ந்த இளைஞன் ஒருவர் வெளிநாடு செல்ல காத்திருந்த நிலையில் வவுனிக்குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட நிலையில் இளைஞனின் படுகொலைக்கு நீதி வேண்டி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்ட்டது.

குறித்த போராட்டமானது இன்று (13) மல்லாவி பொலிஸ் நிலையம் முன்பாக பல்வேறு சுலோகங்களை ஏந்திய வண்ணம் இடம்பெற்றுள்ளது.

தன்னிச்சையான செயற்பாடுகள்

இதன்போது பொலிஸாருக்கும் பொது மக்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதுடன் குறித்த பகுதியில் அதிகளவான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளானர்.

குறிப்பாக, பொலிஸாரின் தன்னிச்சையான செயற்பாடுகளே இந்த விசாரணையின் பின்னணியில் இருப்பதாக போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version