Home இலங்கை சமூகம் யாழில் பல்கலைக்கழக மாணவன் உயிரிழப்பு

யாழில் பல்கலைக்கழக மாணவன் உயிரிழப்பு

0

மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த மாணவன்
ஒருவர் கடந்ல 28ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

இளவாலையை சேர்ந்த விமலேந்திரன்
விதுசன் (வயது 24) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை 

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த இளைஞர் கடந்த 28ஆம் திகதி திடீரென மயக்கமுற்றுள்ளார்.

இந்நிலையில்
இளவாலை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக
வைத்தியர்கள் தெரிவித்தனர்.

அவருக்கு ஏற்கனவே இருதய நோய் இருப்பதாக
தெரியவந்துள்ளது.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம்
பிறேம்குமார் மேற்கொண்டார். 

NO COMMENTS

Exit mobile version