விவசாயிகளுக்கு ரூ. 25,000 நிதி மானியம் வழங்கப்படும் என்று விவசாய மேம்பாட்டு ஆணையர் நாயகம் தம்மிக ரணதுங்க தெரிவித்துள்ளார்.
ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
உர மானியம்
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
பெரும்போகத்திற்கான உர மானியத் திட்டம் கடந்த 30ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.
உர மானியம் கிடைக்காமைக்கோ அல்லது தாமதமாவதற்கோ எவ்வித காரணமும் இல்லை.
உர மானியத்தை வழங்க விவசாய மேம்பாட்டுத் துறையிடம் போதுமான நிதி உள்ளது.
இந்த உர மானியம் இரண்டு தவணைகளாக வழங்கப்படும், மேலும் பருவக் கூட்டம் நடத்தப்பட்டு விவசாயிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டு விவசாய சேவை மையத்திற்கு அறிவிக்கப்பட்டவுடன் முதல் தவணை ரூ. 15,000 வழங்கப்படும்.
14 இலட்சம் விவசாயிகள்
நிலத்தில் நெல் சாகுபடி தொடங்கியுள்ளது.
சுமார் 14 இலட்சம் விவசாயிகளுக்கும் அதாவது சுமார் 8 இலட்சம் ஹெக்டேயர் நெற் காணிகளுக்கும் இந்த மானியத் திட்டத்தின் கீழ் உதவிகளை வழங்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
இரண்டாவது தவணையாக மீதமுள்ள ரூ. 10,000 வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
