வடக்கு தென்னை முக்கோண வலயத்தில் தென்னை விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 30,000 மானியம் வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது என்று தென்னை சாகுபடி சபையின் தலைவர் சுனிமல் ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.
புதிதாக பயிரிடப்படும் தென்னை நிலங்களுக்கு நீர் வசதிகளைப் பெறும் நோக்கில் இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அவர் கூறினார்.
1 மில்லியன் மரக்கன்றுகளை வளர்க்கும் திட்டம்
இந்த தென்னை முக்கோண வலயத்தில் 1 மில்லியன் மரக்கன்றுகளை வளர்க்கும் திட்டத்துடன் இணைந்து இந்த மானியம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
எதிர்காலத்தில் தேங்காய் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் வடக்கில் இந்த தென்னை முக்கோண வலயம் செயற்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
