Home இலங்கை பொருளாதாரம் தொழிற்துறையை மேம்படுத்தும் புதிய சட்டம்: சுனில் ஹந்துன்நெத்தி விளக்கம்

தொழிற்துறையை மேம்படுத்தும் புதிய சட்டம்: சுனில் ஹந்துன்நெத்தி விளக்கம்

0

இலங்கை தொழிற்துறையை மேம்படுத்துவதற்காக பொருள் குவிப்பு எதிர்ப்பு மற்றும் எதிர் வரிகள் சட்டம்(Anti-Dumping and Countervailing Duties Act) கொண்டுவரப்பட்டுள்ளதாக
கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“உற்பத்தி செலவுக்கும் குறைந்த எவ்வித தரமும் அற்ற பொருட்கள் இலங்கையில் அதிகமாக கிடைக்கிறது.
இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் தீபெட்டிக்கும் குறைவான விலையில் லைட்டர் விற்கப்படுகிறது.

வழக்கு பதிவு

எந்த நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டது, அதன் தரம் மற்றும் அது தொடர்பான ஆவணங்கள் எதுவும் இல்லை. இலங்கையில் தீப்பெட்டி தொழிற்சாலைகள் செலுத்தும் வரியின் பெறுமதி கூட இல்லை.

அதனால், இப்போது தேசிய உற்பத்தியாளர் இவ்வாறான பொருள் தொடர்பில் வழக்கு பதிவு செய்யலாம். தடையும் செய்யலாம்.

இவ்வாறான சட்டங்கள் இப்போது மக்களுக்கு தென்படுவதில்லை. காலம் செல்ல செல்ல தான் அதன் பயன் உணரப்படும்.

தேசிய டைல் உற்பத்தி

உதாரணமாக வாகனத்தில் ஆசனப்பட்டி அணிவது போல் தான். இறுக்கமாக தான் இருக்கும் உயிர் சேதங்கள் குறையும் போதே அதன் அருமை தெரியவரும்.

அது மட்டுமல்ல, டைல் மற்றும் அது தொடர்பான உபகரணங்கள் எவ்விதமான தரமும் அற்று உத்தரவாதங்களும் இல்லாத பொருட்கள் குறைந்த விலைக்கு விற்கப்படுகிறன்றன.
தேசிய டைல் உற்பத்தியை நாம் 100 வீதம் சீரமைத்துள்ளோம்.

அதனால் தரமற்ற உத்தரவாதம் அற்ற பொருட்கள் எதிர்காலத்தில் விற்பனை செய்ய முடியாது. இவ்வாறான சட்டங்களால் தேசிய தொழிற் துறை பாதுகாக்கப்படுகிறது” எனக் கூறியுள்ளார்.

Source: https://tamilwin.com/article/sunil-handunneththi-bathware-1755085622

NO COMMENTS

Exit mobile version