Home இலங்கை குற்றம் சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்ட சந்தேக நபர் கைது

சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்ட சந்தேக நபர் கைது

0

அம்பாறையில் போயா விடுமுறை
தினத்தில் மதுபான விற்பனையில் ஈடுபட்ட சந்தேக நபர் கைது
செய்யப்பட்டுள்ளார்.

அம்பாறை மாவட்ட ஊழல் தடுப்புப்
பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய சோதனை நடவடிக்கை ஒன்றினை
பொத்துவில் அறுகம்பே சுற்றுலாப் பகுதியில் மேற்கொண்டிருந்தனர்.

இதன் போது
போயா தினத்தில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த சந்தேக நபர் கைது நேற்றையதினம்(5) செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணை

மேலும் சந்தேக நபரும் மீட்கப்பட்ட மதுபான வகைகளும்
நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக பொத்துவில் பொலிஸ் நிலையத்தில்
ஒப்படைக்கப்பட்டுள்ளன.

சந்தேக நபரை அறுகம்பே சுற்றுலாப் பகுதியில் உள்ள ஒரு
ஹோட்டலில் வைத்து கைது செய்த பொலிஸார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள மதுபான
வகைகளை பறிமுதல் செய்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

NO COMMENTS

Exit mobile version