Home இலங்கை குற்றம் யாழில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த சந்தேகநபர் கைது!

யாழில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த சந்தேகநபர் கைது!

0

நாவாந்துறை – மண்பிட்டி பகுதியில் நீண்ட காலமாக கஞ்சா கலந்த மாவா விற்பனையில்
ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவர்  கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கையானது இன்றையதினம்(17) மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ்
புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் யாழ். பொலிஸ் நிலைய போதை தடுப்பு பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை
முன்னெடுக்கப்பட்டுள்ளது.

விசாரணைகள்

இதன்போது, சந்தேகநபரிடமிருந்து 470 கிராம் கஞ்சா கலந்த மாவா மீட்கப்பட்டது.

விசாரணைகளின் பின்னர், குறித்த சந்தேக நபர்களை நீதிமன்றத்தில்
முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version