Home இலங்கை சமூகம் யாழ்ப்பாணத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்ட இளைஞன்

யாழ்ப்பாணத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்ட இளைஞன்

0

யாழ்ப்பாணத்தில் (Jaffna) ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கை இன்று (27.10.2025) அதிகாலை சுன்னாகம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் பகுதியில் இடம்பெற்றுள்ளது. 

கைது செய்யப்பட்டவர் 33 வயதுடைய ஹெரோயின் வியாபாரி ஒருவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபரிடம் விசாரணை

இதன்போது அவரிடமிருந்து 2 ஆயிரத்து 400 மில்லிகிராம் ஹெரோயின்
மீட்கப்பட்டுள்ளது.

 

யாழ். மாவட்ட சிரேஷ்ட காவல் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் காவல் புலனாய்வு
பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் அடிப்படையில், சுன்னாகம் காவல் நிலைய பாரிய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரியின் தலைமையிலான காவல் குழுவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவரை
நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு
வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version