Home இலங்கை குற்றம் யாழில் ஹெரோயினுடன் சந்தேகநபர் கைது!

யாழில் ஹெரோயினுடன் சந்தேகநபர் கைது!

0

யாழ்ப்பாணம் – சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன்
பகுதியில் 33 வயதுடைய ஹெரோயின் வியாபாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கையானது இன்று(27.10.2025) அதிகாலை இடம்பெற்றுள்ளதுடன், இதன்போது அவரிடமிருந்து 2 ஆயிரத்து 400 மில்லிகிராம் ஹெரோயின்
மீட்கப்பட்டுள்ளது.

சந்தேகநபரிடம் விசாரணை

யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு
பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் அடிப்படையில், சுன்னாகம் பொலிஸ்
நிலைய பாரிய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரியின் தலைமையிலான பொலிஸ்
குழுவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவரை
நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version