Home இலங்கை சமூகம் புதிதாக வாகனம் வாங்க காத்திருப்போருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

புதிதாக வாகனம் வாங்க காத்திருப்போருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

0

வாகன இலக்கத் தகடு பற்றாக்குறை காரணமாக, ஏப்ரல் 28 ஆம் திகதி முதல் காரணமாக இலக்கத் தகடுகள் வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் (DMT) அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பை மோட்டார் போக்குவரத்து திணைக்களம் ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க தெரிவித்துள்ளார்.

இலக்கத் தகடுகளை அச்சிட்ட நிறுவனத்துடனான ஒப்பந்தம் முடிவடைந்துவிட்டதாகவும் புதிய நிறுவனம் தேர்ந்தெடுக்கப்படும் வரை எண் தகடுகள் வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தற்காலிக இலக்கத் தகடு

அதன்படி, புதிய வாகனப் பதிவுகள் மற்றும் பிற பதிவு உரிமையாளர்கள் திணைக்களத்துடன் ஒப்புதலுடன் தற்காலிக இலக்கத் தகடுகளைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுவார்கள்.

 

இந்த தற்காலிக நடைமுறை குறித்து காவல்துறை மற்றும் அந்தந்த மாவட்டச் செயலாளர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது, இதனால் வாகன உரிமையாளர்கள் எந்தத் தடையும் இல்லாமல் வாகனங்களை செலுத்த முடியும்.

NO COMMENTS

Exit mobile version