Home இலங்கை சமூகம் யாழில் குடும்பஸ்தர் ஒருவர் மீது சரமாரியாக வாள்வெட்டு தாக்குதல்

யாழில் குடும்பஸ்தர் ஒருவர் மீது சரமாரியாக வாள்வெட்டு தாக்குதல்

0

யாழில் (Jaffna) குடும்பஸ்தர் ஒருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் யாழ். வடமராட்சி கிழக்கு, உடுத்துறை பகுதியில் நேற்று (20) மாலை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், “உடுத்துறை பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரின் வீட்டிற்கு ஆழியவளை பிரதேசத்தைச்
சேர்ந்த நபர் ஒருவர் சென்று கலந்துரையாடிய போது அது
வாக்குவாதமாக மாறி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வாள்வெட்டு தாக்குதல்

தாக்குதலில் படுகாயமடைந்த ஆழியவளையைச் சேர்ந்த குடும்பஸ்தர் மருதங்கேணி
வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக
பருத்தித்துறை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மேலும், சம்பவத்துடன் தொடர்புடைய இருவரும் மதுபோதையில் இருந்ததாக அப்பகுதி மக்கள்
தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version