Home இலங்கை குற்றம் யாழில் குடும்பஸ்தர் மீது வாள்வெட்டு

யாழில் குடும்பஸ்தர் மீது வாள்வெட்டு

0

யாழ். குரும்பசிட்டி, தெல்லிப்பளை வைத்தியசாலை வீதியில் வாள்வெட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் இன்று(11.09.2025) இடம்பெற்றதாக பொலிஸார் பலாலி பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

மூன்று மோட்டார் சைக்கிளில் வந்த ஆறு பேர் இந்த வாள்வெட்டு சம்பவத்தினை
மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

பொலிஸார் விசாரணை

இந்த சம்பவத்தில், இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர், பலத்த வெட்டு காயங்களுக்கு உள்ளான நிலையில், தெல்லிப்பளை ஆதார வைத்திய
சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் பலாலி பொலிஸார் மற்றும் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை
மேற்கொண்டு வருகின்றனர். 

NO COMMENTS

Exit mobile version