Home இலங்கை குற்றம் நல்லூர் பகுதியில் நள்ளிரவில் நடந்த வாள்வெட்டு

நல்லூர் பகுதியில் நள்ளிரவில் நடந்த வாள்வெட்டு

0

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நல்லூர் பகுதியில் இன்று(16.08.2025) இரவு 5 பேர் கொண்ட குழு ஒன்றினால் ஒருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வாள்வெட்டு காயத்துக்குள்ளான இளைஞன் சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய ஐந்து சந்தேக நபர்கள் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகள்

இந்நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

NO COMMENTS

Exit mobile version