Home இலங்கை குற்றம் யாழ்- உடுத்துறையில் வாள்வெட்டு தாக்குதல்! குடும்பஸ்தர் படுகாயம்

யாழ்- உடுத்துறையில் வாள்வெட்டு தாக்குதல்! குடும்பஸ்தர் படுகாயம்

0

 யாழ் வடமராட்சி கிழக்கு உடுத்துறை பகுதியில் இன்று(20) மாலை வாள்வெட்டு
தாக்குதல் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இருவருக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் இந்த சம்பவம்
பதிவாகியுள்ளது.

தாக்குதலில் படுகாயம்

உடுத்துறை பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரின் வீட்டிற்கு ஆழியவளை பிரதேசத்தைச்
சேர்ந்த நபர் ஒருவர் சென்று கலந்துரையாடிய போது அது
வாக்குவாதமாக மாறி இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிய வருகின்றது.

தாக்குதலில் படுகாயம் அடைந்த ஆழியவளையைச் சேர்ந்த குடும்பஸ்தர் மருதங்கேணி
வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக
பருத்தித்துறை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய இருவரும் மதுபோதையில் இருந்ததாக அப்பகுதி மக்கள்
தெரிவிக்கின்றனர்.

 சம்பவம் தொடர்பாக மருதங்கேணி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version