Home இலங்கை குற்றம் யாழில் வாள்வெட்டு தாக்குதல்: துண்டாடப்பட்ட இளைஞனின் கைவிரல்

யாழில் வாள்வெட்டு தாக்குதல்: துண்டாடப்பட்ட இளைஞனின் கைவிரல்

0

யாழ்ப்பாணம் (Jaffna) – கொக்குவில் வியாபார நிலையத்தில் கடமையில் இருந்தவர் மீது வாள்வெட்டு தாக்குதல்
நடாத்தப்பட்டுள்ளது.

குறித்த சம்பவமானது இன்று (4) அதிகாலை 2.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிகிச்சை

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,  குறித்த வியாபார நிலையத்திற்குள் நுழைந்த 2 பேர், அங்கு கடமையில் இருந்தவர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடாத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இதன்போது வாள்வெட்டுக்கு இலக்கானவரது விரல் துண்டாடப்பட்ட நிலையில்
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். 

மேலும் ,இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version