Home இலங்கை குற்றம் யாழில் இரு குழுக்களுக்கு இடையே வாள்வெட்டு : பொலிஸார் மீதும் தாக்குதல்

யாழில் இரு குழுக்களுக்கு இடையே வாள்வெட்டு : பொலிஸார் மீதும் தாக்குதல்

0

நெடுந்தீவு தனியார் விருந்தக மதுபானசாலையில் இரண்டு இளைஞர் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் இளைஞர் இருவர்
வாள்வெட்டில் காயமடைந்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று(16) இரவு 7 .00
மணியளவில் இடம்பெற்றுள்ளது.

பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது… நெடுந்தீவு மதுபானசாலையில் நேற்று இரவு 7.00 மணியளவில் திடீரென புகுந்த
இளைஞர்குழு மதுபானசாலைக்குள் இருந்த இளைஞர் குழுமீது வாள்வெட்டு தாக்குதல்
மேற்கொண்டுள்ளது.

அதில் இரண்டுபேர் தலையிலும் முகத்திலும் காயமடைந்து வைத்தியசாலையில்
சிகிச்சை பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் மீதும்
வாள்வெட்டுக்குழுவினர் தாக்குதல் மேற்கொண்டுவிட்டு தப்பிச்செல்ல முற்பட்டபோது
ஒருவர் கைதுசெய்யப்பட்டு நெடுந்தீவு பொலிஸ் நிலையத்தில்
தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.

தப்பிச்சென்றவர்களை தேடி கைது செய்யும் வகையில் பொலிசார் நடவடிக்கையினை
மேற்கொண்டுள்ளனர்.

வீதியால் சென்ற பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக வாள்வெட்டுக்குழுவினர்
மோட்டார் சைக்கிளில் பயணித்ததாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த மதுபானசாலையில் இதற்கு முன்னரும் தாக்குதல் இடம்பெற்றுள்ளமை
குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version