Home விளையாட்டு இறுதிச்சுற்றுக்கு தயாரான தமிழீழ அணி: மாவீரர்களுக்கு அர்ப்பணிக்கப்படும் வெற்றி

இறுதிச்சுற்றுக்கு தயாரான தமிழீழ அணி: மாவீரர்களுக்கு அர்ப்பணிக்கப்படும் வெற்றி

0

தமிழீழ மகளிர் உதைப்பந்தாட்ட அணி இறுதிசுற்றுக்கு முன்னேறியுள்ளதாக அணியின் பயிற்றுவிப்பாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த வெற்றியை மாவீரர்களுக்கு அர்ப்பணிப்பதாக தமிழீழ மகளிர் உதைப்பந்தாட்ட அணியின் தலைவி தெரிவித்துள்ளார்.

கொனீபாவின் (CONIFA) இரண்டாவது மகளிர் உலகக்கிண்ண உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி இம்முறை ஆர்க்டிக் வட்டத்திலுள்ள வடக்கு நோர்வேயில் நடைபெற்றது.

ஐரோப்பிய கலாச்சார தலைநகர் Bodø வில் அங்கீகரிக்கபடாத நாடுகளின் CONIFA மகளிர் உலகக்கிண்ணப்போட்டியில் முதல் முறையாக தமிழீழ மகளிர் உதைபந்தாட்ட அணி பங்கேற்றது.

இந்நிலையில் தமிழீழ மகளிர் உதைப்பந்தாட்ட அணி இறுதிசுற்றுக்கு முன்னேறியுள்மை குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/embed/zZSUoVOXPjI

Source: https://ibctamil.com/article/tamil-eelam-team-ready-finals-dedicated-to-heroes-1717897472

NO COMMENTS

Exit mobile version