Home இலங்கை சமூகம் பாடசாலையில் பிரசார நடவடிக்கையில் ஈடுபடுவதாக ஆசிரியர்கள் மீது குற்றச்சாட்டு

பாடசாலையில் பிரசார நடவடிக்கையில் ஈடுபடுவதாக ஆசிரியர்கள் மீது குற்றச்சாட்டு

0

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளர்களாகப் போட்டியிடும் பாடசாலை ஆசிரியர்கள் தங்களது பாடசாலையில் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

குறித்த பிரசார நடவடிக்கை தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக பெஃப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

பாடசாலையில் பிரசார நடவடிக்கை

கொழும்பில் இன்று(02.11.2024) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அந்த அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், இந்த விடயம் தொடர்பில் பாடசாலை அதிபர்கள் அவதானம் செலுத்த வேண்டும் எனவும் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது. 

Source: https://ibctamil.com/article/teachers-campaign-in-school-befrel-system-1730552486

NO COMMENTS

Exit mobile version