Home இலங்கை அரசியல் தேசத்தின் திரட்சியாக சங்கு சின்னம் வெல்லும்: ரெலோ தரப்பு உறுதி

தேசத்தின் திரட்சியாக சங்கு சின்னம் வெல்லும்: ரெலோ தரப்பு உறுதி

0

தமிழ் தேசியத்தின்பால் பயணிக்கின்ற மக்களின் திரட்சியாக சங்குச் சின்னம் நாடாளுமன்றத் தேர்தலில் அதிகப்படியான ஆசனத்தை பெற்று வெற்றி பெறும் என ரெலோ
அமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேன் குருசுவாமி தெரிவித்துள்ளார்.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் கீழ் போட்டியிடுகின்ற
வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்த பின் ஊடகங்களுக்கு கருத்து
தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“கடந்த மாதம் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் சங்குச் சின்னத்தில் தமிழ்
தேசியத்தின் திரட்சிக்காக பொது வேட்பாளர் களம் இறக்கப்பட்ட நிலையில் தமிழ்
மக்கள் அவருக்கு அமோக ஆதரவை வழங்கினார்கள்.

தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு

அந்த ஆதரவை எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சங்கு சின்னத்தில்
போட்டியிடுகின்ற வேட்பாளர்களுக்கு தமிழ் மக்கள் வழங்குவார்கள் என்ற
நம்பிக்கையுடன் சங்கு சின்னத்தில் களமிறங்கியுள்ளோம்.

ஜனாதிபதி தேர்தலில் தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம் தமிழ் மக்களுக்கான
மாற்றம் இல்லை. அதனை அரசாங்கம் ஜெனிவா தொடர்பில் வெளியிட்ட கருத்து தெளிவாக
சுட்டிக்காட்டுகின்றது.

இலங்கை அரசாங்கம் ஜெனிவா தீர்மானத்தை நிராகரிக்கிறோம். உள்நாட்டு பொறிமுறை
மூலமே பிரச்சனைகளுக்கான தீர்வு என தெரிவித்திருக்கின்ற நிலையில், தமிழ்
மக்களின் எதிர்பார்ப்பு சிதறடிக்கப்பட்டுள்ளது.

மக்களின் உரிமைகள்

கடந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ்த் தேசியத்தின் பால் பயணிக்கின்ற கட்சிகள்
ஒன்றிணைந்து சங்குச் சின்னத்தில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தி எமது பலத்தை
காட்டியுள்ளோம்.

அதே சங்கு சின்னத்தில் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்காக ஓரணியில்
பயணிக்கின்ற தமிழ் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து சங்கு சின்னத்தில் களமிறங்கி
உள்ளது.

சங்குச் சின்னம் தமிழ் தேசிய உணர்வுடன் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக
பயணிக்கும் சின்னமாக காணப்படுகின்ற நிலையில், அச்சின்னத்தை அமோக வெற்றி
பெறச் செய்வதன் மூலம் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான பயணத்தை தொடர
முடியும்” எனத் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version