Home இலங்கை சமூகம் யாழ் செம்மணியில் இன்று 12 எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு

யாழ் செம்மணியில் இன்று 12 எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு

0

யாழ் (Jaffna) செம்மணியில் புதிதாக பத்து எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து
எடுக்கப்பட்டுள்ளதுடன் மேலும் 12 எலும்புக்கூடுகள் அடையாளம்
காணப்பட்டுள்ளது.

குறித்த எலும்புக்கூடுகள் இன்றைய (31) அகழ்வின் போது கண்டெடுக்கப்பட்டுள்ளது.

செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள்
கடந்த திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை எழாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அகழ்வு பணி

செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றம் 45
நாட்கள் அனுமதி வழங்கியுள்ள நிலையில், இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை 39 ஆவது
நாளாக அகழ்வு பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை கட்டம் கட்டமாக இதுவரையில் 48 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு
பணிகளின் போது, இன்றைய தினம் அகழ்ந்து எடுக்கப்பட்ட பத்து எலும்புக்கூட்டு
தொகுதியுடன் இதுவரையில் 191 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து
எடுக்கப்பட்டுள்ளது.

தொகுதிகள் 

அத்தோடு, இதுவரையில் 209 எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மதியத்துடன் அகழ்வு பணிகள் நிறைவடைந்த நிலையில், நாளைய தினம் (01) திங்கட்கிழமை காலை மீண்டும் அகழ்வு பணிகள் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

https://www.youtube.com/embed/cj1cdUfuONs

NO COMMENTS

Exit mobile version