அரசு அச்சகத் திணைக்களத்தில் (Government Printing Department) ஒரு பாதுகாப்பு அதிகாரிக்கும் பல ஊழியர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
ஊழியர்கள் உணவகத்தில் சாப்பிட மறுத்ததால், வெளியில் இருந்து உணவு வாங்க வளாகத்தை விட்டு வெளியேற பாதுகாப்பு அதிகாரி அனுமதி மறுத்ததாக கூறப்படுகிறது.
பொலிஸாருக்குத் தகவல்
இதையடுத்து வாக்குவாதம் இடம்பெற்றதோடு, பாதுகாப்பு அதிகாரி காவலர் அறையிலிருந்து ஒரு கத்தியை எடுத்து ஊழியர்களையும் தொழிற்சங்கத் தலைவர்களையும் மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பாதுகாப்பு அதிகாரி பொரளை பொலிஸ் நிலையத்திற்குச் சென்று பொலிஸாருக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.
