Home இலங்கை சமூகம் தமிழ் இளைஞன் மீது மிளேச்சத்தனமான தாக்குதல் நடத்திய இராணுவ அதிகாரிகள்

தமிழ் இளைஞன் மீது மிளேச்சத்தனமான தாக்குதல் நடத்திய இராணுவ அதிகாரிகள்

0

பண்டாரவளை, தொடருந்து நிலையத்தில் தமிழ் இளைஞன் ஒருவரைத் தாக்கிக் குழப்பத்தில்
ஈடுபட்டனர் எனக் கூறப்படும் 8 இராணுவ அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொடருந்து நிலைய அதிபரால் பண்டாரடவளை பொலிஸாருக்குத் தொலைபேசி ஊடாக வழங்கப்பட்ட
தகவலுக்கமையவே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பண்டாரவளை பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம்  நேற்று இரவு 8.30 மணியளவிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என்றும்
பொலிஸார் கூறியுள்ளனர்.

புறப்படுவதில் தாமதம்

தியத்தலாவை இராணுவ முகாமியில் சேவையாற்றும் மேற்படி இராணுவ அதிகாரிகள்,
விடுமுறையில் வீடு செல்லும் வழியிலேயே இவ்வாறு ஒழுக்கமற்ற விதத்தில்
செயற்பட்டுள்ளனர் எனக் கூறப்படுகின்றது.

பதுளையில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தொடருந்தானது பண்டாரவளை தொடருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது

இதன்போது தொடருந்து நிலைய அலுவலகக் கடமையின் நிமித்தம் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

அவ்வேளையில் தொடருந்தில் இருந்து இறங்கியுள்ள மேற்படி இராணுவச் அதிகாரிகள் , பாடல்
பாடியுள்ளதுடன், கூச்சல் சத்தமும் எழுப்பியுள்ளனர்.

பொலிஸில் முறைபாடு

இதன்போது நிலத்தில்
வீழ்ந்திருந்த பணப் பையை அவர்களிடம் ஒப்படைப்பதற்குத் தமிழ் இளைஞன் ஒருவர்
சென்றுள்ளார்.

இதன்போது அந்தத் தமிழ் இளைஞன் பணம் களவாடியுள்ளார் என்று கூறி அவர் மீது
இராணுவ அதிகாரிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர் என பொலிஸார் கூறியுள்ளனர்.

தொடருந்து நிலைய அதிபரும், அங்கிருந்தவர்களும் தாக்குதலைத் தடுக்கச் சென்ற வேளை,
அவர்கள் மீதும் தாக்குதல் நடத்த முற்பட்டு, அடாவடியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் பண்டாரவளை தொடருந்து நிலைய அதிபர் மற்றும் தாக்குதலுக்கு இலக்கான
இளைஞன் ஆகியோரால் பண்டாரவளை பொலிஸ் நிலையத்தில் இரண்டு முறைப்பாடுகள்
முன்வைக்கப்பட்டுள்ளன.

தாக்குதலுக்கு இலக்கான இளைஞன் பண்டாரவளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் பண்டாரவளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியால் மேலதிக
விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

NO COMMENTS

Exit mobile version