Home இலங்கை சமூகம் வல்லிபர ஆழ்வார் திருக்கோயில் பிரதம குரு இயற்கை எய்தினார்

வல்லிபர ஆழ்வார் திருக்கோயில் பிரதம குரு இயற்கை எய்தினார்

0

யாழ்ப்பாணம் (Jaffna) வடமராட்சியின் வரலாற்று சிறப்பு மிக்க வல்லிபுர குறிச்சி ஆழ்வார் ஆலயத்தின் பிரதம குரு கணபதிசாமி குருக்கள் இயற்கை எய்தினார்.

இவர் தனது 76ஆவது வயதில் இன்று (09.07.2024) காலை 10:00 மணியளவில் காலமானார்.

கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் பிரதம
குருவாக கணபதிசாமி குருக்கள் இறை பணியாற்றியுள்ளார். 

இறுதிக்கிரியைகள் 

அத்துடன், இவர் யாழ்ப்பாணம் வடமராட்சி துன்னாலை மத்தி கரவெட்டியை பிறப்பிடமாகவும், சிவன்
கோவிலடி, ஆவரங்காலை வதிவிடமாகவும் கொண்டவர் ஆவார். 

இந்நிலையில், இறுதிக்கிரியைகள் அவரின் சொந்த இடமான சிவன் கோவிலடி, ஆவரங்காலில்
நாளை காலை 9:00 மணியளவில் இடம்பெறவுள்ளது.

அதேவேளை, அவரது மூன்று பிள்ளைகளும் வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் குருவானவர்களாக உள்ளமை
குறிப்பிடத்தக்கது.

Source: https://tamilwin.com/article/the-chief-guru-of-vallipara-alwar-temple-died-1720529743

NO COMMENTS

Exit mobile version