Home இலங்கை அரசியல் கோட்டாபயவின் உத்தரவுக்கு எதிராக தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம்

கோட்டாபயவின் உத்தரவுக்கு எதிராக தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம்

0

2020 ஆம் ஆண்டு போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட
ஒரு பெண்ணுக்கு எதிராக, அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பயங்கரவாதத்
தடுப்புச் சட்டத்தின் கீழ் பிறப்பித்த தடுப்பு உத்தரவு, சட்டத்தை மீறுவதாக
உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு

அதன்படி, மனுதாரரின் அடிப்படை மனித உரிமைகளை மீறியதற்காக, அவருக்கு 100,000
ரூபாய் இழப்பீடு வழங்க உயர் நீதிமன்றம் அரசாங்கத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டு பேலியகொட சிறப்பு புலனாய்வுப் பிரிவால் போதைப்பொருள்
வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட சம்பந்தப்பட்ட பெண் தாக்கல் செய்த மனுவை
பரிசீலித்த பின்னர், இன்று உயர் நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியது.

NO COMMENTS

Exit mobile version