இலங்கையில் 2015ஆம் ஆண்டுக்கு பிறகு அதிகமாக பரவி வரும் போதைப்பொருளாக ஐஸ் போதைப்பொருள் உள்ளது.
இலங்கையில் அதிகமாக பாவிக்கப்படும் போதைப்பொருளாக ஹெரோயின் இருந்தாலும் ஐஸ் போதைப்பொருளே அதிகமாக பரவி வருகின்றது.
‘Crystal Methamphetamine’ எனப்படும் மருத்துவ பெயர் கொண்ட இந்த ஐஸ், அதனை பாவிப்போருக்கு செயற்கையாக Dopamine எனப்படும் இரசாயனத்தை தூண்டுகின்றது.
Dopamine எனப்படுவது மகிழ்ச்சி ஹார்மோன் ஆகும். உதாரணமாக ஒருவர் நன்றாக படித்து சிறந்த சித்திகளை பெற்றால் அவருக்கு இந்த Dopamine ஹார்மோன் சுரக்கும்.
இயற்கையாக Dopamine சுரக்கும் போது அது எம்மை சாதிக்க தூண்டுகின்றது. எனினும் ஐஸ் போதைப்பொருள் போன்ற செயற்கை Dopamineகள் எமது வாழ்க்கையின் முன்னேற்றத்தை தடுக்கின்றது.
இதனை தொடர்ந்து பயன்படுத்துவதால் மூளையில் உள்ள குருதிக் குழாய்கள் வெடித்து பாரிசவாதம் ஏற்படவும் வாய்ப்புள்ளது.
மேலும், உணர்வுகளை அதிகமாக வெளிப்படுத்தல், இல்லாத உருவங்கள் கண்களுக்கு தெரிதல் மற்றும் திடீர் மாரடைப்பு ஆகிய பிரச்சினைகளும் அவர்களுக்கு ஏற்படலாம்.
இது தொடர்பில் வைத்தியர் சாம் லங்காசிறியின் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில்,
