Home இலங்கை சமூகம் யாழில் நிகழ்ந்த அதிசய சம்பவம் : சிலுவையில் இருந்து வடியும் நீர்

யாழில் நிகழ்ந்த அதிசய சம்பவம் : சிலுவையில் இருந்து வடியும் நீர்

0

யாழ்ப்பாணத்தில் ஆண்டவரின் பாதத்திலிருந்து நீர் வடிகின்றமை தற்போது அப்பகுதி மக்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது.

வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் உள்ள கப்பலேந்தி மாதா ஆலய ஆண்டவரின் பாதத்தில்
இருந்து இன்று (28) நீர் வடிந்துள்ளது.

மூன்று மணித்தியாலங்களுக்கு மேலாக ஆண்டவரின் பாதத்தின் விரல் பகுதியில் இருந்து இவ்வாறு நீர் வடிந்துள்ளது.

வடிந்த நீர்

சம்பவம் அறிந்து பல்வேறு இடங்களில் இருந்து வருகை தந்த மக்கள் ஆண்டவரின்
காலில் இருந்து வடிந்தோடிய நீரை எடுத்துச் சென்றுள்ளனர்.

சகோதர மதத்தினர் மற்றும் இராணுவத்தினர், காவல்துறையினர் மற்றும் பொது மக்கள் என பலர் இந்தக் காட்சியை பார்வையிட்டதுடன் புகைப்படங்களையும் எடுத்துச் சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக ஆலய பங்குத்தந்தையால் உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே மேலதிக
தகவல்களை வெளியிட முடியுமென கப்பலேந்தி மாதா ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version