Home இலங்கை குற்றம் கந்தானை ஆலயத்தின் அதிசய சிலை திருட்டு

கந்தானை ஆலயத்தின் அதிசய சிலை திருட்டு

0

கந்தானை புனித செபஸ்தியர் தேசிய ஆலயத்தில் உள்ள அதிசய சிலையொன்று திருடப்பட்டுள்ளது.

குறித்த அதிசய சிலை, இன்று அதிகாலை 2.15 மணி முதல் 3.00 மணிக்குள் திருடப்பட்டதாக தேவாலயம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக பதிவான சிசிடிவி காட்சிகளில் சிவப்பு தொப்பி அணிந்து, முகத்தை மறைத்த நபர் ஒருவர் சிலையை திருடியதை அவதானிக்க முடிந்துள்ளது.

பொதுமக்களின் உதவி

சந்தேகநபர் அருகிலிருந்த ஆண்கள் ஆரம்பப் பள்ளியின் திசையிலிருந்து ஆலயத்துக்குள் நுழைந்து அதே வழியில் வெளியேறியதாக தேவாலயம் கூறியுள்ளது.

கந்தானையில் உள்ள புனித செபஸ்தியார் தேசிய ஆலயம், அதன் குருமார்கள் மற்றும் பிரதேசவாசிகளுடன் இணைந்து காணாமல் போன அதிசய சிலையை கண்டுபிடிப்பதற்காக பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது.

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 17

Source: https://tamilwin.com/article/theft-of-miraculous-idol-of-the-kanthana-temple-1743490832

NO COMMENTS

Exit mobile version