Home இலங்கை சமூகம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ ஏறியது சந்நிதி முருகன் கொடி

ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ ஏறியது சந்நிதி முருகன் கொடி

0

யாழ்ப்பாணம் – வடமராட்சி தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த
உற்சவம் கொடியேற்றத்துடன் இன்று (23) 12 மணியளவில் கோலாகலமாக அரம்பமாகியது.

இன்றைய கொடியேற்றத் திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

இன்று (23) கொடியேற்றத்துடன் ஆரம்பமான வருடாந்த திருவிழா எதிர்வரும் 07ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

விசேட திருவிழாக்கள் 

வருடாந்த மகோற்சவத்தில் விசேட திருவிழாக்களாக 01.09.2025, காலை 9.00 மணிக்கு பூங்காவனத்
திருவிழாவும்,
02.09.2025, காலை 8.00
கைலாய வாகன உற்சவமும், 05.09.2025 மாலை 6.00 சப்பறத் திருவிழாவும்,
06.09.2025 காலை 7.00 தேர் திருவிழாவும்,
07.09.2025, காலை 8.00 தீர்த்தத் திருவிழாவும் மமாலை 6 மணிக்கு மௌனத் திருவிழாவும் இடம்பெறவுள்ளன.

செல்வச்சந்நிதி முருகன் ஆலய 2025ம் ஆண்டுக்கான பெருந்திருவிழாவிற்காக
வருகைதரவிருக்கும் அடியார்கள் நலன்கருதி உள்ளூராட்சி மன்றத்தினர்
சுத்தப்படுத்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அத்துடன் பருத்தித்துறை சுகாதார
வைத்திய அதிகாரி பிரிவினர் நுளம்புக் கட்டுப்பாடு மற்றும் குடிநீர் சுகாதார
பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சந்நிதி முருகன் ஆலய பெருந்திருவிழாவை முன்னிட்டு விசேட போக்குவரத்து
ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் பாதுகாப்பு கடமையில் சிவில் உடையிலும்,
சீருடையிலும் காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை நாளாந்தம் பசித்தோர்க்கும், வறுமையிலுள்ளோர்க்கும் அறப்பணி
ஆற்றிவரும் சந்நிதியான் ஆச்சிரமத்திலும் விசேட பஜனை வழிபாடுகளுடன் சிறப்பு
பூஜைகளும் இடம்பெற்று ஆச்சிரமத்திலும் கொடி ஏற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் இடம்பெற்றதுடன் நாளாந்த திருவிழாக்காலத்தில் பல்வேறு ஆன்மீக நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version